Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Jun 2025 4:59 PM GMT
பொதுமக்கள் | ஆண்டிப்பட்டி
#56942

மின்விளக்கு, குவிலென்ஸ் கண்ணாடி சேதம்

ட்ரெண்டிங்

கடமலைக்குண்டுவில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையோரத்தில் வைக்கப்பட்ட இரவில் ஒளிரும் சோலார் மின்விளக்குகள், குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்விளக்கு, குவிலென்ஸ் கண்ணாடியை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 4:48 PM GMT
ராஜா | நத்தம்
#56937

புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாகம்

மற்றவை

சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டி படுகைக்காடு ரோட்டில் கட்டப்பட்ட ஆண்கள் சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டி கிடக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சுத்தப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்., .

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 4:45 PM GMT
பத்மநாபன் | ஆத்தூர்
#56933

நிழற்குடை இருக்கைகள் சேதம்

நிழற்குடை இருக்கைகள் சேதம்ட்ரெண்டிங்

திண்டுக்கல் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில், தனியார் கலைக்கல்லூரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் இருக்கையில் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த இருக்கைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 4:30 PM GMT
கணேசன் | திருபுவனை
#56927

சர்வீஸ் சாலையில் தடுப்புச்சுவர் வேண்டும்

ட்ரெண்டிங்

விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருபுவனை மெயின் ரோட்டில் இருந்து திருவண்டார்கோவில் செல்லும் சர்வீஸ் சாலையில் இந்திராநகர் பகுதியில் சிறிய உயரம் கொண்ட தடுப்புச்சுவரே உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 4:29 PM GMT
மணிகண்டன் | நிரவி டி.ஆர்.பட்டினம்
#56926

அகற்றப்படாத கழிவுகள்

ட்ரெண்டிங்

திரு-பட்டினம் காந்தி பூங்கா அருகே சாக்கடை கழிவுகளை அகற்ற சாலையில் குவித்து வைத்திருந்தனர். அதனை அகற்றாமல் அப்படியே விட்டதால் வாகனங்களில் வருபவர்கள் வழுக்கி விழுந்து வருகின்றனர். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -காதர்மெய்தீன், திரு-பட்டினம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 10:44 AM GMT
கவிமதன் | காஞ்சிபுரம்
#56850

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

கூடுதல் பஸ் வசதி வேண்டும்போக்குவரத்து

காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் தொழிற்பூங்காவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு பணிபுரியும் ஏராளமானோா் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால் காலை முதல் மாலை வரையில் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏராளமானோர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கின்றனர். எனவே, காஞ்சீபுரம் முதல் ஒரகடம் வரையில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 10:42 AM GMT
கோவிந்தராஜன் | செங்கல்பட்டு
#56849

பொதுமக்கள் அவதி

குப்பை

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நரசங்குப்பம் ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் மூச்சுதிணறல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். கடந்த 1 ஆண்டுகளாக இதுகுறித்து ஊரகவளா்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 10:41 AM GMT
அசோக் குமார் | திருவள்ளூர்
#56848

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் இருந்து ஏகாட்டூர் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் சாலை கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தினமும் பள்ளி கல்லூரிக்கு சென்று வரும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் மழைக்காலங்களில் இந்த குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். எனவே,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 10:40 AM GMT
சாமுவேல் | திருவள்ளூர்
#56847

சிதறி கிடக்கும் குப்பைகள்

குப்பை

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு மூகாம்பிகை நகர், தேவி நகர் பகுதியில் உள்ள தெருவில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலைகளில் சிதறி கிடக்கும் குப்பைகள் அந்த வழியாக செல்பவர்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும், பயங்கர துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Jun 2025 10:39 AM GMT
முருகையா | திருவள்ளூர்
#56846

சிதலமடைந்த மின்கம்பம்

சிதலமடைந்த மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், புலியூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. மின்கம்பங்கள் ஆங்காங்கே உடைந்து சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick