Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 2:16 PM GMT
பொதுமக்கள் | கரூர்
#59447

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கரூர் ஜவகர்பஜார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் பெரும் அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களுக்கு குறுக்கே சென்று விழுவதால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 11:34 AM GMT
பொதுமக்கள் | அரியலூர்
#59405

விபத்தில் சிக்கும் அபாயம்

ட்ரெண்டிங்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே சென்று விழுவதால் வாகன ஓட்டிகள் அதிகளவில் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் பலரும் நிலைதடுமாறி கீழே விழும் அபாயமும், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் சிலமுறை விபத்து ஏற்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:50 AM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59385

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

சேலம் வடக்கு அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி, கலெக்டர் அலுவலகம் உள்பட மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முதியவர்கள், மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -மதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:41 AM GMT
சுந்தரி சுப்ரமணியன் | செங்கல்பட்டு
#59367

புதர் மண்டிய மழைநீர் வடிகால்வாய்கள்

புதர் மண்டிய மழைநீர் வடிகால்வாய்கள்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகளும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆத்தூர் வடபாதி, ஆத்தூர் தென்பாதி மற்றும் வடகால், அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர். நகர், மெஜெஸ்டிக் அவென்யூ, சாய் கோல்டன் சிட்டி உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான மழைநீர் வடிகால்வாய்கள் செடி,கொடிகளால் நிறைந்து புதர்மண்டி காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை மழைநீர் வடிக்கால்வாய் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:39 AM GMT
கீதா ரத்னகுமார் | செங்கல்பட்டு
#59366

குளம் போல் தேங்கும் மழைநீர்

குளம் போல் தேங்கும் மழைநீர்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜே.சி. நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் குளம் போல அந்த சாலை காட்சியளிக்கிறது. இந்த பகுதியின் பல இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து ஆபத்தான நிலையிலும் காணப்படுகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்கவும், ஓயர்களால் ஆபத்து ஏற்படும்முன் அதை சரிசெய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:36 AM GMT
கிருபாகரன் | திருவள்ளூர்
#59365

வாகனஓட்டிகள் அவதி

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ரவுண்டனா அருகேயுள்ள நெடுஞ்சாலைகளின் ஓரம் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ரவுண்டானா பகுதியை கடப்பதற்கே 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை அங்கிருந்து அகற்ற போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:31 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#59364

ஆபத்தான சாலை

சாலை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்துக்கு அருகில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். மிகவும் பரபரப்பான இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. முக்கியமான சாலையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:29 AM GMT
ராஜா | திருவள்ளூர்
#59363

சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்

சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகர் அண்ணா தெருவின் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சாலை மிகவும் சுகாதார சீர்கேடுடன் இருக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வாகன ஓட்டிகளும் அந்த பகுதியை கடக்கும்போது முக சுளிப்புடனே செல்லும் அவலநிலையும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:17 AM GMT
சுப்பையா | திருவள்ளூர்
#59362

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி நூம்பல், புளியம்பேடு கிராமத்தில் உள்ள பாலாஜி நகர் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். விபத்துகள் குறித்த அச்சம் சாலையை கடந்து செல்பவர்களுக்கு உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கி சாக்கடைபோல துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 9:14 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#59361

சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடி

சேதமடைந்த மழைநீர் வடிகால் மூடிகழிவுநீர்

சென்னை பெருங்குடி சந்தோஷ் நகர் சாலையின் நடுவே உள்ள மழைநீர் வடிகால் மூடி உடைந்து அதனுள் குப்பைகள் தேங்கி, ஆபத்தான நிலையில் கிடக்கிறது. அருகில் உள்ள குடியிருப்பின் குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த மழைநீர் வடிகால் மூடியை சீரமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick