7 Sep 2022 12:58 PM GMT
#13358
அடிபம்பு அமைக்கப்படுமா?
செங்கோட்டை
தெரிவித்தவர்: கனியமுதன்
செங்கோட்டையில் நகரசபை முத்துசாமி பூங்கா உள்ளது. இங்கு வருபவர்கள், அங்குள்ள அடிபம்பில் தண்ணீர் அடித்து பயன்படுத்தி வந்தனர். பின்னர் நாளடைவில் அந்த அடிபம்பு முழுவதுமாக சேதமடைந்து விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு மட்டும் தரைமட்ட அளவில் உள்ளது. அதில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறி வீணாகி வருகிறது. எனவே, பயன்பாடு இல்லாத இந்த ஆழ்துளை கிணற்றில் அடிபம்பு அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?