1 Oct 2022 11:46 AM GMT
#18383
தடுப்பு வேலி தேவை
ஞாலம்.
தெரிவித்தவர்: -சுபாஷ்,
அருவிக்கரை ஊராட்சிகுட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவு வாயிலில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் வரை சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. சாலையின் ஓரத்தில் பல இடங்களில் 40 அடி வரை பள்ளமாக உள்ளது. ஆனால் இந்த சாலையில் தடுப்பு வேலி அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் ஓரத்தில் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.