27 Nov 2022 8:59 AM GMT
#22357
பயணிகள் அவதி
இனயம்
தெரிவித்தவர்: அப்துல் ரசாக் தன்னார்வலர்
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட இனயம் இனியநகர் பாலம் வளைவில் இருந்து சிறிது தூரத்தில் பஸ்நிறுத்தம் உள்ளது. அந்த நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் பாலத்தின் வளைவு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். அப்போது, பஸ் பக்கவாட்டில் சரிந்து நிற்பதால் ெபண்கள், முதியோர்கள் ஏறுவதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பஸ்சை நிறுத்தத்தில் சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல் ரசாக், இனயம்.