18 Dec 2022 11:05 AM GMT
#23746
தேங்கி நிற்கும் கழிவுநீர்
யா.தேத்தாங்குளம்
தெரிவித்தவர்: Thiru
மதுரை மாவட்டம் யா.தேத்தாங்குளம் அருகில் நரசிங்கத்தில் இருந்து நரசிங்க பெருமாள் கோவில் செல்லும் வழியில் சமணர்சிற்பங்கள் அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.