Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 July 2022 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#4524

குடிநீர் வினியோகம் செய்யும் நேரத்தை தெரிவிக்கலாமே

தண்ணீர்

திருப்பூர் மாநகரில் வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளர்கள்தான் அதிகம். அவர்கள் காலையில் வேலைக்கு சென்றால் இரவில்தான் வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் எப்போது வரும் என்று தெரிவது இல்லை. வேலைக்கு சென்ற பிறகு குடிநீர் வருவதால் அவர்களால் குடிநீரை பிடிக்க முடியவில்லை. எனவே குடிநீர் வருவதற்கு ஒருநாள் முன்னதாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும். மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 10:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#4523

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

திருப்பூர் கூலிபாளையம் நால்ரோட்டில் இருந்து பெரியாயிபாளையம் வரை சாலையில் நடுவில் குழி தோண்டி ராட்சத குழாய் பதித்துள்ளார்கள். அதன்பின்னர் சாலை சீரமைக்க வில்லை. இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். சாலையின் நடுவில் மண்ரோடு போன்று மேடு பள்ளம் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவேஅதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 4:06 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#4474

தண்ணீர் தொட்டியில் வளரும் செடி

தண்ணீர்

திருப்பூர் பார்க் ரோடு மாவட்ட நூலகம் அருகே செல்லும் வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அருகிலேயே செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இதை ஆரம்பத்திலேயே அகற்றாமல் விட்டால் செடி பெரிதாக வளரும் போது அதன் வேர்களால் பிளாஸ்டிக் தொட்டி சேதமடைய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இது ேபான்று செடிகள் வளர்வதால் பிளாஸ்டிக் தொட்டிகள் உடைந்துள்ளன. எனவே, ஏதேனும் சேதம் ஏற்படும் வரை காத்திருக்காமல், இந்த தொட்டியை சுற்றி வளரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2022 2:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#4433

தண்ணீர் தொட்டியில் வளரும் செடி

தண்ணீர்

திருப்பூர் பார்க் ரோடு மாவட்ட நூலகம் அருகே செல்லும் வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் அருகிலேயே செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இதை ஆரம்பத்திலேயே அகற்றாமல் விட்டால் செடி பெரிதாக வளரும் போது அதன் வேர்களால் பிளாஸ்டிக் தொட்டி சேதமடைய வாய்ப்புள்ளது. சில இடங்களில் இது ேபான்று செடிகள் வளர்வதால் பிளாஸ்டிக் தொட்டிகள் உடைந்துள்ளன. எனவே, ஏதேனும் சேதம் ஏற்படும் வரை காத்திருக்காமல், இந்த தொட்டியை சுற்றி வளரும் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 1:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#4159

இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை

இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடைபோக்குவரத்து

இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை அவினாசி வட்டம் வள்ளிபுரம் கிராமம் அவரப்பாளையம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை இடிந்து ஒரு வருடமாக புதிய நிழற்குடை கட்டப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே அவினாசி பேரூராட்சி அதிகாரிகள் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷண்முகன்சம்பத், தொரவலூர் 97880 99306

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:30 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#1894

காத்திருக்கும் ஆபத்து

சாலை

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியிலிருந்து நாராயணசாமி நகர் செல்லும் வழியில் ரோட்டின் நடுவே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலமானது சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் உள்ள கான்கிரீட்டுகள் உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்லும் போது ஓட்டை உள்ள இடத்தில் வாகனத்தின் சக்கரங்கள் சிக்கி விபத்திற்குள்ளாகும் அபாயம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#1891

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

திருப்பூர் காங்கேயம் ரோடு மணியகாரம்பாளையத்தில் இருந்து காசிபாளையத்திற்கு செல்லும் ரோடானது சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த ரோட்டில் ஆங்காங்கே பெரிய குழிகள் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். சில இடங்களில் ரோட்டில் பெரிய குழிகள் உள்ளன. இதனால் இந்த ரோட்டில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல், குண்டும், குழியுமாக உள்ள ேராட்டில் தொடர்ச்சியாக செல்பவர்களின் வாகனங்கள் விரைவில் நாசமடைகின்றன. இந்த வழியாக தினமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:27 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#1533

பாதசாரிகளுக்கு இடையூறு

சாலை

திருப்பூர் பார்க் ரோட்டில், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி அருகே ஒரு மரத்தின் கிளை முறிந்து நடைபாதையின் குறுக்கே கிடக்கிறது. மாநகராட்சி பூங்கா, தனியார் பள்ளிகள், ேகாவில் போன்றவை இந்த ரோட்டின் அருகாமையில் இருப்பதால் இந்த நடைபாதையை அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகளை பெற்றோர்கள் நடைபாதை வழியாக அழைத்து செல்கின்றனர். இதனால் சிலர் நடைபாதையை விட்டு விட்டு ரோட்டில் ஆபத்தான வகையில் நடந்து செல்கின்றனர். எனவே மரக்கிளையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#1120

பாதாள சாக்கடை குழி

பாதாள சாக்கடை குழிகழிவுநீர்

பாதாள சாக்கடை குழி திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு வீதி ஈஸ்வரன் கோவில் அருகில் குறுகிய பாதை உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணி சரியாக நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தட்டி விட்டு விழுவது தொடர்கதையாகிவருகிறது. இதுபோன்று அவல நிலை தினந்தோறும் நடந்து கொண்டு உள்ளது. கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும். கா.கருணாகரன், 15 வேலம்பாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#1118

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாலை

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? தாராபுரம் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. பூக்கடைக் கார்னர் பகுதியில் இருந்து வடக்கு காமராஜபுரம், தர்கா, சுங்கம் போன்ற பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறவில்லை. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாராபுரம் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? விக்னேஷ், தாராபுரம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 July 2022 4:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#1001

சுகாதார‌ சீர்கேடு

கழிவுநீர்

திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி கோவில் அருகில் உள்ள சாலை, குப்பை கொட்டும் இடமாக மாறிவருகிறது. இதனால் சாலையில் குப்பைகள் சிதறிக் கிடப்பதோடு, சுகாதார‌ சீர்கேடு, நோய் பரவும் அபாயமும், தூர்நாற்றமும் வீசுகிறது. குப்பை மேடாக மாறிவரும் இந்த சாலையை‌ விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick