Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Jan 2025 12:16 PM GMT
Mr.V.Ramachandran
#53240

கால்நடைகள் தொல்லை

மற்றவை

பந்தலூர் பஜாரில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அவை ஆங்காங்கே அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றன. அத்துடன் சாலையின் குறுக்கே நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் சாலையில் செல்பவர்களை தாக்குகின்றன. இதனால் பஜாருக்கு வந்து செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு நிலவும் கால்நடைகள் தொல்லைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 12:16 PM GMT
Mr.V.Ramachandran
#53238

சாலையில் வழிந்ேதாடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஆனைமலை தாலுகாவில் எல்.ஆர்.டி. பஸ் நிறுத்தம் அருகே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க கால்வாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 12:15 PM GMT
Mr.V.Ramachandran
#53237

சுகாதார சீர்கேடு

குப்பை

கோவையை அடுத்த பன்னிமடை பகுதியில் உள்ள சாலையோரத்தில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் குப்பைகளை மூட்டை, மூட்டையாக வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்ைபகள் காற்றில் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகளை வீசி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 12:34 PM GMT
Mr.V.Ramachandran
#53085

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 98-வது வார்டுக்கு உட்பட்ட போத்தனூர் சாரதா மில் சாலை பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி ஆறு போல கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது. அடிக்கடி அந்த பகுதியில் இதே பிரச்சினை தொடர்கிறது. எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 12:33 PM GMT
Mr.V.Ramachandran
#53084

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பந்தலூரில் அம்மா உணவகத்துக்கு செல்லும் வழியில் நடைபாதைக்கு அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயில் உள்ள அடைப்பை நீக்கி, கழிவுநீர் சீராக வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Jan 2025 12:32 PM GMT
Mr.V.Ramachandran
#53083

கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜபுரம் நேருஜி நகரில் சாக்கடை கால்வாயை தூர்வாரவில்லை. இதன் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:27 AM GMT
Mr.V.Ramachandran
#52709

புதர் செடிகள் அகற்றப்படுமா?

சாலை

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையோரங்களிலும், எஸ்டேட் சாலையோரங்களிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:23 AM GMT
Mr.V.Ramachandran
#52708

சாலை அடைப்பு

சாலை

மதுக்கரை மார்க்கெட் முதல் மரப்பாலம் செல்லும் இணைப்பு சாலையை சர்ச் காலனி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த சாலையை ரெயில்வே துறையினர் குழி தோண்டியும், இரும்பு கம்பிகளை போட்டும் அடைத்து வைத்து உள்ளனர். இதனால் சர்ச் காலனி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அந்த சாலையை அடைத்ததால், அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:23 AM GMT
Mr.V.Ramachandran
#52707

வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்

சாலை

கோவை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 2-வது குடியிருப்பு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இங்கு ஏற்கனவே இருந்த பழைய சாலை மட்டத்தை விட புதிய சாலை உயர்த்தி அமைக்கப்படுகிறது. இதனால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் காணப்படுகிறது. சிலர் சாலையை ஆக்கிரமித்து வீட்டின் முன்பு சாய்வு தளம் அமைத்து உள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறைந்து உள்ளது. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை ஏற்கனவே இருந்த மட்டத்தில் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:22 AM GMT
Mr.V.Ramachandran
#52706

கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேடு ஏ.டி. காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:05 AM GMT
Mr.V.Ramachandran
#52705

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கூவமூலா ஆதிவாசி காலனியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஆதிவாசி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்படுமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 11:05 AM GMT
Mr.V.Ramachandran
#52704

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கோவை சாய்பாபா காலனியில் உள்ள என்.எஸ்.ஆர். சாலையில் தினமும் காலையிலும், மாலையிலும் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதுபோன்று வாகன போக்குவரத்தும் மிகுதியாக இருக்கும். ஆனால் அந்த சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick