Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Jun 2024 10:39 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#47102

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

மற்றவை

பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் கரப்பாடி பிரிவு உள்ளது. இங்குள்ள நால்ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் கரப்பாடி பிரிவில் உயர் கோபுர மின் விளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 10:38 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#47101

தார்சாலை வேண்டும்

சாலை

பந்தலூர் தாலுகா புஞ்சைவயல் அருகே ஒளிமடா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லை. வெறும் மண் சாலையே உள்ளது. அதுவும் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 11:11 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#46947

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சரி செய்ய சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை முடிக்கவில்லை. அதோடு குழியையும் மூடாமல் அப்படியே வைத்திருப்பதால், அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பணியை விரைந்து முடித்து குழியை மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 11:05 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#46946

உழவர் சந்தை அமைக்கப்படுமா?

மற்றவை

பந்தலூரில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ஆனால் அவர்கள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்த போதிய வசதிகள் இல்லை. இதன் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையில் பந்தலூரில் விளையாட்டு மைதானம் செல்லும் சாலையோரத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் காலியாக கிடக்கிறது. அந்த நிலத்தில் உழவர் சந்தை அமைத்து கொடுத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். அதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 11:04 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#46945

இறைச்சி கழிவுகள்

மற்றவை

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து நெல்லியாளம் செல்லும் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை முடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 1:18 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#46792

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகரில் இருந்து வி.ஐ.பி. சென்ட்ரல் டவுன் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழை பெய்து சாலையில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 1:18 PM GMT
Mr.V.Ramachandran | கிணத்துக்கடவு
#46791

விபத்து அபாயம்

போக்குவரத்து

கிணத்துக்கடவு தாலுகா காணியாலம்பாளையம் சாலை குறுகலாக இருந்ததால் விரிவாக்கம் செய்தனர். ஆனால் சாலையோரம் இருந்த அடி பம்பை மட்டும் அகற்றாமல் விட்டு விட்டனர். இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த அடி பம்பை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 12:15 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#46768

கால்நடைகள் தொல்லை

மற்றவை

பந்தலூர் பஜாரில் கால்நடைகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்குள்ள சாலையானது கூடலூர் மட்டுமின்றி கேரள மாநிலம் கோழிக்காடு, சுல்தான்பத்தேரி செல்லும் பிரதான சாலையாக உள்ளது. அங்கு கால்நடைகள் உலா வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பந்தலூர் பஸ் நிலையத்துக்குள்ளும் கால்நடைகள் உலா வருவதுடன் படுத்து ஓய்வெடுக்கின்றன. அதோடு அசுத்தம் செய்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கால்நடை தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 12:53 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#46455

பொதுமக்கள் அவதி

தண்ணீர்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்புறம் மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடத்தில் பிளாஸ்டிக் டேங்க் அமைத்தும், அதன் கீழ் பகுதியில் கான்கிரீட் சிலாப் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் பாரம் தாங்காமல் பிளாஸ்டிக் டேங்க் உடைந்து விட்டது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே அந்த டேங்கை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 12:51 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#46454

தடுப்புச்சுவர் வேண்டும்

மற்றவை

பந்தலூர் அருகே காரக்கொல்லி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி உள்ள மண் திட்டு நாளுக்குநாள் உடைந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்புகள் சேதம் அடைகின்றன. மேலும் பொதுமக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலை உள்ளது. எனவே அந்த மண் திட்டை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 12:50 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#46453

பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

கோவை பாலசுந்தரம் சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை பெயர்ந்து காணப்படுகிறது. அங்கு ஆபத்தான குழிகள் ஏற்பட்டு உள்ளன. அந்த குழிகளில் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லவே பலரும் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அந்த குழிகளை மூடி கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 12:50 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#46452

பாலம் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைக்கொல்லியில் இருந்து காரக்கொல்லி செல்லும் பகுதியில் ஓடை கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர். அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன்பாக, அந்த பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick