Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2022 9:33 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#6489

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளியாடி பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவை உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் மிகவும் அச்சப்பட்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜாண், பள்ளியாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 9:32 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#6488

மழைநீர் ஒழுகும் அரசு பஸ்கள்

போக்குவரத்து

நாகர்கோவிலில் இருந்து தடிக்காரன்கோணத்திற்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றின் மேற்கூரை சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகிறது. இதனால், பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் இதுபோல் பல பஸ்களின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ளன. எனவே, பயணிகள் நலன்கருகி பஸ்களின் மேற்கூரைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -மணிகண்டன், தெள்ளாந்தி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 9:30 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#6487

சாலையின் அவலம்

சாலையின் அவலம்சாலை

நாகர்கோவில், பால்பண்ணை அருகே உள்ள இயேசுபக்தன் தெருவில் சாலை தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பின்பு சாலையை சீரமைக்கவில்லை. தற்போது அந்த சாலை மண் சாலையாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று நடந்து கூட செல்ல முடியாத அளவு சகதிக்காடாக மாறுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும். -பெனிஷ், இயேசுபக்தன் தெரு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2022 9:27 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#6486

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பைகளை அகற்ற வேண்டும்குப்பை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்தூரில் இருந்து பறக்கை செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜோசப் பிரபு, குளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 8:59 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#6262

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகட்டிமாங்கோட்டில் இருந்து செருப்பங்கோடு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இ.முருகன், கட்டிமாங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 8:57 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#6261

ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு தேவை

மற்றவை

குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் வழிபாட்டுத்தலங்களில் அதிகாலை நேரத்திலும், விழாக்காலங்களிலும் விதிமுறைகளை மீறி அதிக சத்தத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், முதியவர்கள், மாணவ-மாணவிகள், நோயாளிகள், சாலையில் பயணம் ெசய்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி விதிகளை மீறி அதிக சத்தத்தில் ஒலிப்பெருக்கள் பயன்படுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்டனி, நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 8:56 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#6259

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்சாலை

ராஜாக்கமங்கலம் தபால் நிலையம் அருகே சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதிகாடாக மாறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்கிறவர்களும், வாகனங்களில் செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரசன்னா, ராஜாக்கமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 8:54 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#6258

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இளங்கடை, பட்டாரியார் சாஸ்தா நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், பட்டாரியர் சாஸ்தாநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 8:52 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#6256

மரம்வெட்டி அகற்றப்பட்டது

மரம்வெட்டி அகற்றப்பட்டதுமற்றவை

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளையில் சாலைேயாரம் ஒரு பட்ட மரம் நின்றது. அந்த மரத்தின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் அதை வெட்டி அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை வெட்டி அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:17 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#6042

குடிநீர் வரவில்லை

குடிநீர் வரவில்லைதண்ணீர்

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பேயன்குழி பகுதியில் உள்ள பொதுகுடிநீர் குழாயில் சீராக குடிநீர் வருவதில்லை. தற்போது கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வராமல் உள்ளது. ஊராட்சி சார்பில் பிற பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம் ெசய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மட்டும் தண்ணீர் வருவதில்லை. இந்த பகுதியை ேசர்ந்த மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே, இந்த பகுதியில் முறையாக குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜி. சுபின், பேயன்குழிஜி. சுபின்,ஜி....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:15 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#6040

புதர்களை அகற்ற வேண்டும்

புதர்களை அகற்ற வேண்டும்குப்பை

சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்களாக சூழ்ந்துள்ளன. இந்த புதர்களில் பாம்பு, விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.தர்மர், சண்முகபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 9:13 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#6039

அகற்ற வேண்டிய மின்கம்பம்

அகற்ற வேண்டிய மின்கம்பம்மின்சாரம்

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பட்டறை இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து இருந்தது. இதனால், அங்கு புதிய மின்கம்பம் நாட்டப்பட்டது. அதன்பின்பு பழைய மின்கம்பம் அகற்றப்படாமல் அதன் அருகிலேேய உள்ளது. அந்த பகுதியில் பல வீடுகள் உள்ள நிலையில் பயனற்ற மின்கம்பம் சாய்ந்து விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பழைய மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜஸ்டின், அழகப்பபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick