Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37393

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 14 வீடுகள் உள்ளன. இதில் உள்ளூர் போலீசார் உள்பட 5 வீடுகளில் போலீசார் வசித்து வருகின்றனர். மற்ற வீடுகளை போலீசார் ஓய்வெடுக்க பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு வீடு குடோனாக பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சுவர் இல்லாததால், ஆடு, மாடுகள் குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிவதுடன், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இந்த குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37392

புதருக்குள் மயானம்

மற்றவை

சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியில் மயானம் பராமரிப்பு இல்லாமல் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு விஷஜந்துகள் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முட்புதர்களை அகற்றி மயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகன், மல்லமூப்பம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37390

துர்நாற்றத்தால் பெண்கள் அவதி

தண்ணீர்

சேலம் சூரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பிரதான குடிநீர் குழாய் உள்ளது. இதில் பெண்கள் தினமும் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்த குழாய் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியே வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் குடிநீர் குழாய் பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37385

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

சேலம் மாநகராட்சி 26-வது வார்டு புதிய பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனி உள்ளது. சாமிநாதபுரம் செல்லும் வழியில் குப்பைகள் தினமும் அள்ளாததால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை தினமும் அல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -முருகன், அங்கம்மாள் காலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37384

மின்விளக்கு எரியவில்லை

மற்றவை

ஓமலூர் தாலுகா கோட்டை மேட்டுப்பட்டி கிராமம் ஆர்.சி. செட்டிப்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டானா முதல் கார் கம்பெனி வரை சர்வீஸ் ரோட்டிலும் மயானம் செல்லும் வழியில் உள்ள ரோட்டிலும் மின்விளக்குகள் இருந்தும் மாதக்கணக்கில் எரியவில்லை. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும். ஜோசப், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37380

அதிகாரிகள் ஆய்வு

சாலை

கிருஷ்ணகிரியில் ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சின்னாறு, சாமல்பள்ளம், குருபரப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் வேகத்தை குறைக்கும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் கடக்கும் போது பயங்கரமாக வாகனங்கள் அதிர்ந்து பயணிகளை அச்சுறுத்துகிறது. அதேபோல வாகனங்களின் டயர்களும் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே அந்த சாலைகளில் உள்ள வேகத்தடைகள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37379

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளன. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றுகின்றன. தினமும் நாய்க்கடியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். நாள்தோறும ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துராஜ், தாலுகா...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37376

சாலை விரிவாக்கம்

சாலை

கிருஷ்ணகிரியில் சென்னை-பெங்களூரு, சேலம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும் அங்கு உள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். -மூர்த்தி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37375

செயல்படாத கிராம சேவை மையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கெங்கபிராம்பட்டியில் கிராம சேவை மையம் உள்ளது. இந்த மையம் செயல்படாமல் 24 மணி நேரமும் மூடியே உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகளை பெற சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வெங்கடேஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37370

போலீசார் ரோந்து

மற்றவை

ஏரியூர் பஸ் நிலைய பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த பஸ் நிலைய பகுதி, மதுப்பிரியர்கள் மற்றும் சூதாடுபவர்களின் அரங்கமாக மாறி வருகிறது. எனவே பஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் விரைவில் பஸ் நிலையத்தை திறக்க அரசு முன்வர வேண்டும். -மாதையன், நாகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37369

ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர்

மற்றவை

பாலக்கோடு தாலுகா அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஒட்டியுள்ளது. இந்த அலுவலக சுற்றுச்சுவர் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் சுவரில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குரு, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37360

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் அரூர் நகரில் பைபாஸ் ரோட்டில் அரசு மாணவர் விடுதி உள்ளது. அந்த விடுதியின் முன்புறம் சாக்கடை வாய்க்காலில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி குப்பைகளை அகற்றவும், வேறு இடத்தில் குப்பை தொட்டி வைத்து அதில் குப்பை கொட்டவும் அரூர் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுந்தரமூர்த்தி, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick