Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37805

சுகாதார வளாகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமானி மல்லாபுரம் ஊராட்சியில் உப்பாரஅள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால் பயன்படுத்தப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37803

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் காற்று அதிகமாக வீசும் போது குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுகின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -கோவிந்தன், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37802

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டஅள்ளி ஊராட்சியில் எம்.எஸ். நகர் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த குடிநீர்தொட்டி சேதமடைந்து, தூண்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மேலும் தொட்டியின் உள்புரத்தில் பாசிகள் படிந்து உள்ளதால் தண்ணீரை குடிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதனை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதீப், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37801

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்திவாடி சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? -அரவிந்த், ஒசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37800

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் ரோட்டில் கே.சி.சி.நகர் பிரதான சாலையில் இருந்து உள்ளே குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - அன்சர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37798

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு கிராமத்தில் இருந்து பலவதிம்மனபள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. பேடப்பள்ளியில் உள்ள மாதிரி பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மஞ்சுநாத், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37607

குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?

தண்ணீர்

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட ஆண்டிப்பட்டி காலனியில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் குழாய் ஏதும் அமைக்கப்படாததால் பயனில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு அருகே குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர், -செல்லமுத்து, ஆண்டிப்பட்டி காலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37606

ஆபத்தான பள்ளம்

சாலை

சேலம் சத்திரத்தில் இருந்து லீ பஜார் செல்லும் வழியில் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் ஒன்று உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வருபவர்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்க பள்ளத்தை அடையாளப்படுத்த கல் மற்றும் மரக்குச்சிகளை நட்டு வைத்துள்ளனர். ஆனால் வாகனங்களில் வரும்போது அந்த கற்களில் மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க இந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? -ராமு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37605

வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

மற்றவை

சேலம் இரும்பாலை சர்க்கார் கொல்லப்பட்டி அருகே அரசு மருந்து கிடங்கு உள்ளது. இதன் அருகே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. மேலும் அந்த பகுதியில் மர்மநபர்கள் மது குடித்து வருகின்றனர். எனவே பறிமுதல் வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், -ராஜாகிள்ளிவளவன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37604

பழுதடைந்த குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் சூரமங்கலம் மண்டலம் 18-வது வார்டு மெய்யனூர் பனங்காடு பகுதியில் குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும். -ராமன், மெய்யனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37603

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களின் கண்களில் தூசி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா ? -சபரி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 4:54 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37602

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி சந்தை பகுதியில் இருந்து வாங்கல் பிரிவு சாலை, சர்க்கரை ஆலை செல்லும் சாலை, மோகனூர் வரும் சாலைகள் உள்ளன. ஆனால் இந்த 3 சாலைகளிலும் வேகத்தடைகள் இல்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வேகத்தடை அமைக்க வேண்டும். -ராஜா, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick