Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 5:50 PM GMT
Mr.Nagarajan | சங்ககிரி
#40331

சுகாதார சீர்கேடு

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் கோவில் மேற்கில் பெரியசாமி தெரு உள்ளது. இந்த பகுதியில் சிலர் தினந்தோறும் குப்பையை கொட்டி எரிக்கிறார்கள். இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்களுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவ்வாறு குப்பைகளை கொட்டி எரிப்பதால் அங்கு சுகாதார சீர் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ்குமார், வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#40329

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் கருங்கல்பட்டி 57-வது வார்டு பகுதியில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -பழனிகுமார், கருங்கல்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40320

தார்சாலை வேண்டும்

சாலை

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா கரடியூர் கிராமத்தில் உள்ள வியூ பாயிண்ட் சாலை மண்சாலையாக உள்ளது. இந்த சாலை மழை பெய்தால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொது மக்களும் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது அவதியடைகின்றனர். எனவே மண் சாலையை தார் சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அந்தோணி ராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40316

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

சேலம் 29-வது வார்டு ரத்தினசாமிபுரம் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கொட்டப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மெதுவாக நடக்கிறது. மேலும் சாலையில் ஜல்லிகற்கள் பரப்பி இருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பீமன், ரத்தினசாமிபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40307

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40303

சாலைகளில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் இருந்து பள்ளிப்பட்டிக்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், பள்ளிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40299

கால்நடைகளுக்கு இடையூறு

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா வளையப்பட்டி பஞ்சாயத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை மருந்தகம் உள்ளது. தற்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கழிவுநீர் கால்வாய் நான்கு அடி உயரம் அமைக்கப்பட உள்ளதால் கால்நடை மருந்தகம் கேட் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் இந்த மருந்தகத்திற்கு கால்நடைகளை உள்ளே அழைத்து செல்வதற்கு இடையூறாக இருக்கும். எனவே கழிவுநீர் கால்வாயை சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். -பிரபாகரன், குரும்பப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40287

குடிநீர் வழங்க கோரிக்கை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2017-ம் ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்திற்கு சில நாட்களில் பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது. அந்த பகுதியில் அரசு மருத்துவமணை, அரசு மேல்நிலை பள்ளி, ரெயில் நிலையம், குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் நிலையத்தை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40286

கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவு நீர் கால்வாயை உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40284

புகைகூண்டு அமைக்கப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டவுன் பஸ் நிலையம் அருகில் அரசு வணிக நிறுவன கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் ஓட்டல்கள், பேக்கரி, போன்ற கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த கடைகளில் இருந்து புகை வெளியேற உரிய புகைகூண்டு அமைக்கப்படாததால் அந்த பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் புகைகூண்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமா? -பசுபதி, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40283

கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் கரகதஹள்ளி ஊராட்சி கடமடை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைக்கப்படாததால் மழைநீர், கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். -பழனி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:32 PM GMT
Mr.Nagarajan
#40282

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

ஓசூர் 37-வது வார்டு பகுதியில் தனியார் அல அவுட் மிடுகரப்பள்ளி, சாலையில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் பொது மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரரேஷ், ஓசுர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick