Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Feb 2024 6:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#44280

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மாநகராட்சியின் பல்ேவறு இடங்களில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் சாக்கடை கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்பட பல்வேறு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய், சாக்கடை கழிவுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். -வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 6:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#44279

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் 8-வது வார்டு காமராஜர்நகர் 2-கிராசிங்கில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. துப்புரவு பணியாளர்கள் சாக்கடை கால்வாய்யை சுத்தம் செய்வது இல்லை. இந்த தெருவில் இடிக்கப்பட்ட வீடுகளின் கற்கள் சாக்கடையோரம் கொட்டப்பட்டு வருட கணக்கில் தேங்கி உள்ளதால் பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் இந்த தெருவில் அதிகமாக உள்ளன. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதை துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44269

பக்தர்கள் கோரிக்கை

மற்றவை

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் மெட்டாலா பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வரும் பஸ்கள் பெரும்பாலும் மெட்டாலா சென்று நிற்கிறது. இதனால் 2 கிலோ மிட்டர் தூரம் பக்தர்கள் நடந்து வரும் நிலை ஏற்படுகிறது. அனைத்து பஸ்களும் நின்று செல்வதற்கு அரசு போக்குவரத்து தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -தர்மன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44267

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தமாக 21 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் பள்ளிபாளையம் நகராட்சி பகுதி முழுவதும், ஏராளமான கோழி இறைச்சி கடைகள், மாலை நேர சாலையோர கடைகள், உணவகங்கள் என அதிகளவில் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இறைச்சி கடைகளில் இருந்து வீசப்படும் இறைச்சி கழிவுகளை, உண்பதற்காக, கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றுகிறது.ஒரு சில நேரங்களில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்கள் அவ்வழியே செல்வோரை கடித்து விடுகிறது. மேலும் தெருநாய்களை கண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44260

தடுப்புச்சுவர் தேவை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட செல்லமுடி பஸ் நிலைய பகுதியில் சாலையின் குறுக்கே ஓடை அமைந்துள்ளது. இதற்காக சிறிய அளவிலான தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலமானது, ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புசுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், சிறு, சிறு விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:25 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#44257

காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது அவை பழுதடைந்து தலைகீழாக தொங்கியபடி காட்சி பொருளாகி மாறி உள்ளது. அடுத்த மாதம் பாலக்கோட்டில் நடைபெறும் புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் நலன்கருதி, உடனடியாக மாவட்ட நிர்வாகம் செயலிழந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வர உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#44250

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக சாலையோரம் சுற்றித்திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரை பின் தொடர்ந்து கடிக்கிறது. இதனால் சாலையில் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சபரீஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#44248

புளியமரத்தை அகற்ற வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ் தெருவில் பழைய போலீஸ் நிலையம் அருகே புளியமரம் உள்ளது. இந்த மரம் விரிசல் அடைந்து எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை அருகே இருப்பதால் பெரும் சேதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த மரத்தை அகற்ற வேண்டும். -ராமசாமி, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#44091

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞர் கருணாநிதி அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பிவழிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் முகம்சுழித்தபடி இந்த வழியாக செல்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை தினமும் எடுத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். - ஊர்பொதுமக்கள், வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#44090

பிரேத பரிசோதனை கூடத்துக்கு பணி ஆட்கள் தேவை

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை கூடத்தில் இதுவரை பணி ஆட்கள் இல்லாமல் உள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்காக ஆத்தூர், சேலம் பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே வாழப்பாடி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44088

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேந்தமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியில் சென்று வருகின்றனர். எனவே அங்கு சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 3:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#44036

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் ஆவின் மேம்பாலம் அருகில் சென்னை செல்லும் சாலை, பெங்களூரு செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை ஆகிய 3 சாலைகளும் சந்திக்கும் முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் இருந்து தேவசமுத்திரம், முல்லை நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த பாலத்தை கடந்து செல்ல நீண்டநேரம் ஆகிறது. எனவே இந்த பகுதியில் போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick