Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Dec 2024 5:53 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#51899

சேதமான சாலையும்... சரி செய்யப்படாத அவலமும்...

சாலை

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் பொன்குமார் மைன்ஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்கள் முழுவதும் மழைநீர் நிரம்பி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:50 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#51898

மூடி இல்லாத பாதாள சாக்கடை

கழிவுநீர்

சேலம் சீதாராமன் சாலையில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் உள்ளது. இதனால் சாலையோரம் நடைபயிற்சி செய்பவர்கள், மதுப்பிரியர்கள் அதில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பாதாள சாக்கடைக்கு மூடி அமைத்து உயிர்பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபாலன், 4 ரோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:46 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#51897

சுற்றுலா பயணிகள் அவதி

கழிவுநீர்

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் இடமான ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் ெவளியேற்றப்படுகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா? -குமரேசன், ஏற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:32 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51892

விபத்து அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன. ஒன்று ஈரோடு செல்வதற்கும், மற்றொன்று ஈரோட்டில் இருந்து வருவதற்கும் உள்ளது. இந்த இரு பாலத்தின் ஓரங்களிலும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஆபத்தை அறியாமல் பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். மேலும் சிலர் வாகனங்களை பாலத்தில் நிறுத்தி விட்டு மணி கணக்கில் பேசுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். -வினோத், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:31 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51890

புதர்மண்டி கிடக்கும் மின்கம்பம்

மின்சாரம்

பள்ளிபாளையம் ராஜ வீதியில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் வழியில் தனியார் புக் கடை அருகே சாலையோரம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் தான் தெருவிளக்குகளை ஆன்-ஆப் செய்யும் சுவிட்ச் உள்ளது. இந்த மின்கம்பத்தின் கீழே செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் விஷபூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ளவர்களும், தெருவிளக்கை போட வருபவா்களும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதனை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகுல்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:27 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51888

குண்டும், குழியுமான சாலை

சாலை

பள்ளிபாளையம் ஆர்.எஸ். ரோடு பகுதி குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் எதிர்எதிர் வரும் பஸ்கள், வாகனங்கள் சாலையோரம் ஒதுங்க முடியாத நிைல உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -மாதேஷ், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:25 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51887

குண்டும், குழியுமான சாலை

சாலை

வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி ஆத்துப்பாலம் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்க ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும். -கண்ணன், சப்பையாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:16 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#51881

வாகன ஓட்டிகள் சிரமம்

போக்குவரத்து

பாலக்கோடு நகர நெடுஞ்சாலையில் பஸ் பணிமனை, தக்காளி மார்க்கெட், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்த பகுதியில் மழை பெய்யும் போது மழை நீருடன், சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பார்களா? -செந்தில், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:13 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#51877

பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட தளவாய் அள்ளிபுதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாதங்களாக எந்திரம் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், எர்ரனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:06 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51873

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். நாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -சந்திரன், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:04 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51871

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் தேசிய நெடுஞ்சாலை இணைய கூடிய பகுதியில் சாலையோரத்தில், ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், கோவிலுக்கு வந்து செல்ல கூடிய பக்தர்களும் இவ்வழியாக செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 5:03 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#51870

சுகாதார சீர்கேடு

குப்பை

பர்கூர் பேரூராட்சி 14-வது வார்டு ஹவுசிங் போர்டு, மல்லப்பாடி ஊராட்சி 9-வது வார்டு மேல் வெங்கடாபுரம் ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு வாசிகள் வெங்கடாபுரம் செல்லும் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை அகற்றி மீண்டும் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. -மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick