Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Jan 2025 5:26 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#53293

பொது இடங்களில் மது அருந்தலாமா?

மற்றவை

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அருவிகளில் குளித்துவிட்டு பொது இடங்களில் மது அருந்துகின்றனர். குறிப்பாக கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெண்கள், குழந்தைகள் இருப்பதை பொருட்படுத்தாமல் அரை நிர்வாண கோலத்தில் குளித்துவிட்டு அங்கேயே மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். இவ்வாறு பொது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:22 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#53291

விபத்து அபாயம்

சாலை

சேலம் சங்கர் நகர் பிரதான சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை அப்பகுதி மக்கள் விபத்து ஏற்பட கூடாது என பெயர் பலகை கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:09 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53280

கோழி கழிவுகளால் அபாயம்

குப்பை

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் சித்தர் கோவில் மலைப்பகுதியில் கோழி கழிவுகள் அங்காங்கே கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கோழி கழிவுகளை நாய்கள் எடுத்து வந்து வீடுகள் அருகே போட்டு விட்டு ெசல்கின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:08 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#53278

விபத்தை ஏற்படுத்தும் சாலை

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் அதிக விபத்து ஏற்படும் சாலையாக சேந்தமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையில் அதிக வளைவுகள் காணப்படுகிறது. இதனால் அங்கு அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் சென்டர் மீடியன்கள், வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:06 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#53277

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

மற்றவை

நாமகிரிப்பேட்டை கார்கூடல்பட்டி ஊராட்சியில் மெட்டாலா கிராமம் உள்ளது. இந்த கிராமம் 3 சாலைகள் சந்திக்கும் பிரதான பகுதியில் உள்ளது. இந்த பகுதி மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. எனவே மெட்டாலா கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சாமி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 5:04 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53276

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டியில் இருந்து குரும்பப்பட்டி செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலத்தில் வளையப்பட்டி கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே தரைப்பாலத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -பிரபாகரன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:57 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53275

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா அருகில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பஸ்கள், ஆட்டோக்கள் நீண்ட நேரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ரவுண்டானாவில் சிக்னல் கிடைத்தும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே 5 ரோடு சந்திப்பு பகுதியில் பெங்களூரு சாலை, காந்தி சாலை, சேலம் சாலை, சென்னை சாலை பகுதியில் பஸ், ஆட்டோக்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதை தடுக்க போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:55 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53274

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் குறுக்கே வாகனங்கள் வந்து, விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்திட நகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:54 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53273

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் பாலத்தின் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் மக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -பிரபு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:52 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53272

மின்கம்பிகளால் அபாயம்

மின்சாரம்

பென்னாகரம் பஸ் நிலைய பகுதியில் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும், கடைகள், வீடுகள் உள்ளிட்டவைகளுக்கும் குறிப்பிட்ட ஒரு மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்புகள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மின் கம்பத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மின் இணைப்புகளும் மிகவும் தாழ்வான நிலையில் செல்கிறது. மேலும் மின்கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மின்கம்பிகளில் உரசியபடி அபாய நிலையில் செல்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53271

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

தர்மபுரி பெரும்பாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. பென்னாகரம், மேச்சேரி பிரதான சாலை வழியாக வரும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் செல்லாமல், பிரதான சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. இதன் காரணமாக பஸ் நிலையத்திற்குள் சிலர் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். மேலும் பஸ்கள் பிரதான சாலையிலேயே நின்று பொதுமக்களை ஏற்றி இறக்குவதால், போக்குவரத்துக்கு இடையூறும், கால விரயமும் ஏற்படுகிறது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் சென்று வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Jan 2025 4:50 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53270

பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த வாகனங்கள்

போக்குவரத்து

ஏரியூர் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து சுமார் ஓராண்டு ஆகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நுழைய முடியாத வகையில் நுழைவுவாயிலில் இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்களை நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இதன் காரணமாக பஸ் நிலையத்தை தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பஸ் டிரைவர்களும், பயணிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே பஸ் நிலையத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்குமார், அச்சம்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick