Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 March 2025 4:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#54247

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். நாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -சுபாஷ், மொரப்பூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:25 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54246

போக்குவரத்து விதிமீறல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் மொபட், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயது நிரம்பாத சிறுவர்கள் பலரும் ஓட்டுகிறார்கள். குறிப்பாக அரசு பள்ளிகளுக்கே மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கிறார்கள். சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து விதிகளை மீறி இயக்குவதால் பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாகவும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சூளகிரி நகர பகுதிகளில் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:23 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54245

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பர்கூர் தாலுகா காரகுப்பத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இங்கிருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காரகுப்பம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல மாதங்களாக வீணாகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து பொதுமக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 4:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54244

சிக்னல் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகரில் ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரே நேரத்தில் 4 சாலைகளிலும் வாகனங்கள் பாலத்தின் அடியில் சந்தித்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலை உள்ளன. கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ளதை போல ஆவின் மேம்பாலம் அருகில் சிக்னல் அமைக்க வேண்டும். அதேபோல தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி செல்லும் வாகனங்கள் சுற்றி பாலத்தின் அடியில் சென்று வருகின்றன. இதனால் நேரம் வீணாகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 5:16 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54084

சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்

மற்றவை

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சி சவூரியூரில் மேட்டுத் தெருவில் 30 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர் உள்ளது. தற்போது பராமரிப்பு இல்லாத இந்த டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையோரம் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம். இந்த பகுதி குழந்தைகள், பெரியவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் உடனடியாக அதிகாரிகள் இந்த பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதிதாக வேறு இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும். -ரமேஷ், ஜலகண்டாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 5:13 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#54083

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் பழைய பஸ் நிலையம் முதல் டவுன் போலீஸ் நிலையம் வரை உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது நகரின் முக்கிய பகுதி என்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவில் முன்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைக்கப்படுமா? -வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 5:02 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54079

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பை காடு மலைப்பகுதியில் இருந்து தச்சங்காடு வரும் தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் சைக்கிளில் செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், கோம்பை காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 5:01 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54078

நிழற்கூடம் அமைக்கலாமே!

மற்றவை

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மகளிர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளன. இந்த பகுதி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மழை, வெயில் நேரங்களில் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் அதிகாரிகள் விரைந்து நிழற்கூடம் அமைத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். -ஜோதி, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:59 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54077

கரடு முரடான சாலை

சாலை

எருமப்பட்டி அருகே காவக்காரன்பட்டியில் இருந்து வடவத்தூர் செல்லும் சாலையின் குறுக்கே நெருக்கமேடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாகவும் ஜல்லிக்கற்கள் பெயந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் இரண்டு சக்கர வாகங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு தள்ளி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் உடனடியாக இந்த சாலையை தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெருமாள், நெருக்கமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:56 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#54072

அவசியம் வேகத்தடை

சாலை

மல்லசமுத்திரம் ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் எதிரே வையப்பமலை–-மல்லசமுத்திரம் சாலை செல்கிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்புசாலை என்பதால், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு வருகின்ற வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#54066

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

ஏரியூர் முதல் மேச்சேரி வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் பூச்சூர் முதல் பழையூர் வரையிலான தார்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பயணம் செய்யவே முடியாத அளவிற்கு சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்களாக இருக்கிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:48 PM GMT
Mr.Mohan | அரூர்
#54065

வேகத்தடை வேண்டும்

சாலை

அரூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் வேகமாக வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள்ளே இருந்து வெளியே வரும் நெடுஞ்சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சாமி, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick