Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Sep 2023 2:37 PM GMT
Mr. Raja
#40665

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைதெரு, சிராஜூதீன் நகர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:36 PM GMT
Mr. Raja
#40664

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் தலையாரித்தெரு அருகில் ஆஸ்பத்திரி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர்.அருகில் பள்ளிக்கூடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:35 PM GMT
Mr. Raja
#40661

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பஸ் நிறுத்தம் அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்த வேகத்தடை சமீபத்தில் சாலைபணிக்காக அகற்றப்பட்டது.இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:31 PM GMT
Mr. Raja
#40660

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பொதுமக்கள், மாணவ மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடித்து விடுகின்றன. மேலும் நிலை தடுமாறி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கும்பகோணம்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:29 PM GMT
Mr. Raja
#40659

பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர், இருபதுகண் பாலம் போன்ற இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை சேதப்படுத்து விடுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:27 PM GMT
Mr. Raja
#40657

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி போன்ற பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:26 PM GMT
Mr. Raja
#40654

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் பனயைக்குடி பகுதியில் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் சனீஸ்வரபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:24 PM GMT
Mr. Raja
#40649

தொற்றுநோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்திஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் கதிராமங்களம் ஊராட்சிக்குட்பட்ட வேலவன் நகர், விநாயகா நகர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது தொற்றுநோய் பரவும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:23 PM GMT
Mr. Raja
#40647

வர்ணம் பூசப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பனங்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடையில் வர்ணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொள்கின்றன. உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசி இரவில் பிரதிபலிக்கக் கூடிய ஸ்டிக்கர் ஒட்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பனங்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:22 PM GMT
Mr. Raja
#40645

காட்டுப்பன்றிகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடிக்கு விதைகள் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஆனால் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து விதைகளை முற்றிலும் சேதப்படுத்தி விடுகிறது . இதனால் விவசாயிகள் பொருள் சேதம் அடைவதோடு மனவேதனையும் அடைகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் சேத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:18 PM GMT
Mr. Raja
#40637

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் அடிக்கிறது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 2:16 PM GMT
Mr. Raja
#40635

குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுமா?

தண்ணீர்

நாகை நகரில் தற்போது குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகை நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick