Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Oct 2024 9:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50651

கால்வாயை தூர்வார வேண்டும்

கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கும், அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவீன், பஜார் வீதி வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:15 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#50650

ஊருக்குள் வராமல் செல்லும் பஸ்கள்

போக்குவரத்து

பவுர்ணமி அன்று வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பஸ்களும் போளூர் உள்ளே வந்து செல்வதில்லை. மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் பஸ்கள் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால் போளூர் நகரிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்பவர்களும் வேலூர், ஆரணி, திருவண்ணாமலை பகுதியிலிருந்து போளூருக்கு வருபவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். உடனடியாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போளூர் நகருக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:13 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50649

பாழடைந்த பள்ளிக்கட்டிடம்

பாழடைந்த பள்ளிக்கட்டிடம்மற்றவை

வந்தவாசிைய அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் பாழடைந்துள்ளது. இந்தப் பாழடைந்த கட்டிடத்தில் உள்ள ஆபத்தான நிலையில் காணப்படும் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே பாழடைந்த கட்டிடத்தைச் சீரமைக்க வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#50648

கழிவறைக்கு தண்ணீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென அலுவலக நுழைவு கேட் அருகில் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் முறையான தண்ணீர் வசதி இல்லாததால் அந்தக் கழிப்பறையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். -கோபால், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:09 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#50647

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வந்தவாசி பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வலம் வருகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. அவ்வாறு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு செல்கிறார்கள். எனவே வந்தவாசி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வே.குருலிங்கம், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:05 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#50646

பாழடைந்த வி.ஏ.ஓ. கட்டிடம்

பாழடைந்த வி.ஏ.ஓ. கட்டிடம்மற்றவை

அரக்கோணம் தாலுகா வட மாம்பாக்கத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம் சேதமடைந்துள்ளது. அங்கு பொதுமக்கள் உட்காரும் மேடை முழுவதும் சேதம் அடைந்து காணப்படுகிறது. அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த வளாகம் முழுவதும் மண் குவியல், குப்பைகளாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், வடமாம்பாக்கம்கண்டிகை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 9:01 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#50645

புதரை அகற்றுவார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வாலாஜா, ஆற்காடு, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்கிறார்கள். பஸ்களில் ஏறும், இறங்கும் இடத்தில் புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெ.தேவன், ஓச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 8:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#50644

குடிநீர் வினியோகம் செய்யவில்லை

தண்ணீர்

ஆற்காடு நகராட்சியில் அண்ணாசாலை, ராஜ் முதலியார் தெரு, சுந்தரம் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் தினமும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 8:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50643

பயணிகள் நிழற்கூடம் கட்டுவார்களா?

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் மரத்தடியின் நிழலிலும், கடையின் முன்பகுதியிலும் நிற்கின்றனர் . பூட்டுத்தாக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கமும் எம்.பி. மற்றும் எல்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பஸ் பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும். -ராம்குமார், ரத்தினகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 8:55 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#50642

புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள கடைகளில் ஹான்ஸ், புகையிலை, குட்கா பாக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. தனியார் மருத்துவமனைக்கு வரும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பாக்கு, புகையிலையை வாங்கி செல்கிறார்கள். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் வாங்கி செல்கிறார்கள். ஹான்ஸ் புகையிலை, குட்கா பாக்குகள் திருட்டுத்தனமாக பதுக்கி விற்கும் வியாபாரிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆதிமுருகன், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 8:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50641

பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். -பாலசுந்தரம், பூங்குளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 8:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#50640

தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

திருப்பத்தூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சாலையோரம் செல்லும் கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் தூர்வாரப்படுவதில்லை. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஜேந்திரன், புதுக்கோட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick