Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 March 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55028

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் தாயப்பன் நகரில் உள்ள சாலை சேதமாகி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55027

கால்வாய்களை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்படுள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கழிவுநீரிலேயே மக்கள் நடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அவ்வாறு அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். -செல்வகுமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55026

சிமெண்டு தூணால் இடையூறு

சிமெண்டு தூணால் இடையூறுமற்றவை

அரக்கோணம் ரெயில் நிலைய நுழைவுப்பகுதி அருகே ‘லிப்ட்’ பகுதிக்கு செல்லும் வழியில் இரும்புத்தடுப்புக்கு குறுக்கே சிமெண்டு தூண் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிமெண்டு தூணை தாண்டி செல்ல சிரமப்படுகின்றனர். இதை, ரெயில்வே அதிகாரிகள் பரிசீலனை செய்து, பயணிகளுக்கு இடையூறு இல்லாத வழியை ஏற்படுத்தி தர வேண்டும். -சேகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55024

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் கால்வாய்

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் கால்வாய்கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தில் செய்யாறு-ஆரணி சாலையோரம் உள்ள கால்வாயில் கழிவுநீர் வெளியே செல்ல வழி இல்லாததால் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும். -சர்மா, மாம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55023

தாழ்வாக இருக்கும் மின் கம்பிகளால் ஆபத்து

மின்சாரம்

அரக்கோணம் நாகாலம்மன் நகர் பகுதியில் உள்ள கீதா நகர், ஜி.கே.என். நகர் ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகளில் மின் கம்பக்கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாக உள்ளன. ஆபத்து ஏற்படும் முன் மின் கம்பிகளை சரி செய்து உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55022

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வேலூர் சத்துவாச்சாரி முருகன் கோவில் அருகே சன்னதி தெருவில் சாலை அமைக்கப்படாமல் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. தற்போது அந்தச் சாலையில் சிமெண்டு கலவை வைத்து பள்ளத்தை சரி செய்துள்ளனர். ஆனால், அப்பகுதி மக்கள் எங்களுக்கு நிரந்தரமாக சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தாமரைக்கண்ணன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#55021

தளம் சீரமைக்க வேண்டும்

தளம் சீரமைக்க வேண்டும்மற்றவை

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வகப்பிரிவு கட்டிடம் முன்பு உள்ள தளம் உடைந்து, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. வயது முதிர்ந்தவர்கள், ஆணிக்கால் பாதித்தவர்கள், சர்க்கரை நோயால் கால் எரிச்சல் உள்ளவர்கள் அங்கு செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் தளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#55019

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள்குப்பை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோடு ஓரம் பல நாட்களாகக் குப்பைகள் அள்ளப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்று வீசும்போதும், வாகனங்கள் வேகமாகச் செல்லும்போதும் குப்பைகள் பறந்து வந்து சாலையில் விழுகின்றன. சாலையோரம் குவிந்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காதர்பாட்ஷா, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55018

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார் சாலை

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார் சாலைசாலை

கண்ணமங்கலம் அருகே படவேடு ஊராட்சியில் சாமந்திபுரம் கிராமத்தில் செண்பகதோப்பு அணை செல்லும் ரோட்டில் தார் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால், தார் சாலை பெயர்ந்து மண் சாலையாக காட்சி அளிக்கிறது. அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்தெடுத்து, புதிதாக தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 7:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#55016

சாலையோர திறந்தவெளி கிணறால் ஆபத்து

சாலையோர திறந்தவெளி கிணறால் ஆபத்துமற்றவை

கண்ணமங்கலம்-வண்ணாங்குளம் இடையே அழகுசேனை கிராமத்துக்கு செல்லும் தார் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு அபாயகரமான வளைவு உள்ளது. அந்தப் பகுதியில் சாலையோரம் திறந்தவெளி கிணறு உள்ளது. அதன் அருகில் மதுபான கடை உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் வந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் திறந்த வெளி கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. திறந்த வெளி கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.கண்ணதாசன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 7:28 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#55015

பயன்பாட்டுக்கு வராத போலீஸ் குடியிருப்பு

பயன்பாட்டுக்கு வராத போலீஸ் குடியிருப்புமற்றவை

கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகம் பொதுப்பணித்துறையால் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தக் குடியிருப்பை சுற்றிலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது. பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பை திறந்து சீரமைத்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும். -அய்யப்பன், கடலாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:16 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#54857

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

குடியாத்தம் புதுப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் காங்கிரஸ் அவுஸ்ரோட்டின் நடுேவ போக்குவரத்துக்கு இடையூறாக, கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். -பரணீதரன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick