குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-09-06 10:30 GMT

பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் ஊராட்சி சிறுநிலா கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, கட்டப்பட்ட 5 மாதங்களுக்குள்ளாகவே மின்மோட்டார் பழுதாகி பயன்பாடற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, பழுதான மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்