மரக்கிளையால் விபத்து

Update: 2026-08-30 17:39 GMT

சேலம் கன்னங்குறிச்சி குறிஞ்சி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் முதியோர்களும், குழந்தைகளும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். பூங்காவில் மின்சார ஒயர்கள் செல்லும் பகுதியில் மரக்கிளை உடைந்து ஒரு மாதமாக தொங்கிக் கொண்டே இருந்தது. தற்போது அந்த உடைந்த மரக்கிளை மின்கம்பத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது. இதுகுறித்து பல முறை மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்