பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு இப்ப விழுமோ? எப்ப விழுமோ? நிலையில் உள்ளது. இதனால் சுவற்றின் ஓரம் செல்லவே பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமாக சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.