திருச்சி தீரன்நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள திறந்தநிலை மழைநீர் வடிகால் வாய்க்கால் புதர்மண்டி, சாக்கடை கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பராமரிப்பின்றி திறந்தவெளியாக காணப்படும் இந்த வடிகால், அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. எனவே, இந்த வாய்க்காலை உடனடியாக சுத்தம் செய்து, திறந்தநிலையில் உள்ள பகுதியை சிமெண்டு சிலாப்புகளால் மூடி பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.