மதுரை நகர் காளவாசல், பரவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.