நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் அருகே உள்ள சித்தர் கோவில் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள், கடும் வெயில் மற்றும் வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. குறிப்பாக ராசிபுரம் –ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்வதால், வாகன விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சித்தர் கோவில் வனப்பகுதியில் குரங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி, அவை வனப்பகுதியிலேயே பாதுகாப்பாக வாழும் வகையில் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.