பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தனி தாலுகாவாகப் பிரிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையிலும், போலீஸ் நிலையம் இல்லாத தாலுகாவாக உள்ளது. இதனால், இங்கு நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி பெற 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நீண்டகாலச் சிரமத்தைப் போக்கும் வகையில் வேப்பந்தட்டையில் உடனடியாகக் காவல் நிலையம் அமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.