தடையின்றி மருத்துவ சேவை கிடைக்குமா?

Update: 2026-07-26 13:43 GMT

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 33-வது வார்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பல நேரங்களில் அந்த சேவைகள் வழங்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் அதிக பணம் செலவழித்து அந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே சுகாதார நிலையத்திலேயே அந்த சேவைகள் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்