திருச்சி உறையூர் இந்திரா நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை பார்த்து குரைத்து அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.