பெண்கள் அச்சம்

Update: 2024-04-14 14:08 GMT

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆண், பெண், சிறுவர்- சிறுமிகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருன்றனர். புனிதமான இடமாக பக்தர்கள் கருதும் சமயபுரத்தில் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாலையிலேயே மது விற்பனை நடைபெறுவதால் அதை வாங்கி குடிப்பவர்கள் சாலையோரத்தில் உள்ள மரங்களுக்கு அருகிலேயே குடித்துவிட்டு அலங்கோலமாக கிடப்பதும், அநாகரிகமாக பேசுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. சில நேரங்களில் குடிபிரியர்களுக்கு இடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளும் அந்த பகுதியில் நடந்து வருகிறது. இதனால் அம்மனை தரிசனம் செய்ய பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் இந்த காட்சியை கண்டு வேதனைப்படுவது மட்டும் இல்லாமல் அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடை இரவு நேரங்களில் மூடிய பிறகும் மது கிடைப்பதால் எந்த நேரமும் சமயபுரம் நால்ரோட்டில் குடிமகன்களின் கும்மாளம் அரங்கேறி வருகிறது. இது சமயபுரம் போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் கள்ளத்தனமாக மது விற்பனை தினமும் நடந்து வருகிறது. எந்த நேரம் சென்றாலும் மது கிடைக்கும் என்ற சிந்தனையில் குடிமகன்கள் அங்கே கூடுகின்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் அச்சத்தை போக்கும் வகையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்