குரங்குகள் தொல்லை

Update: 2024-04-14 12:17 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பட்டூர் கிராமத்தில் உள்ள பிரம்மா கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவில் அருகே வயல் வெளியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் இக்கோவிலில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்களும், குழந்தைகளும் பயத்தில் வந்து செலுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்