இரும்பு நாற்காலிகள் சேதம்

Update: 2026-08-02 17:10 GMT

ஆரணி கோட்டை மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகவும், அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள இரும்பு நாற்காலிகள் அனைத்தும் உடைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அதில் ஒரு இரும்பு நாற்காலி கல்லை வைத்து தாங்கி பிடிக்கும் நிலையில் வைத்துள்ளனர். மாவட்ட விளையாட்டுத் துறையினர் பழுதடைந்த இரும்பு நாற்காலிகளை மாற்றி அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-விக்னேஸ்வரன், ஆரணி. 

மேலும் செய்திகள்