9 Jun 2024 5:46 PM GMT
#47425
தேங்கும் மழை நீரால் அவதி
நாமக்கல்
தெரிவித்தவர்: ராமன்
நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சில நேரங்களில் தண்ணீரில் இறங்காமல் செல்வதற்காக விலகி செல்லும்போது சேறும், சகதியில் மாட்டி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்படுகிறது. எனவே மழைநீர் தேங்காமல் சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.