- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணற்று நீரை அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, அதிலிருந்து குழாய் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தென்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு மிக குறைந்த அளவே குடிநீர் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் தேவைக்கு குடிநீரை பிடித்து கொண்டு குடிநீர் குழாயை அடைத்து விடாமல் மரம், செடி கொடிகளுக்கு தண்ணீர் விடுவதே ஆகும். தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் தெற்கு பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு குறைந்த அளவு கிடைத்து வந்த குடிநீரும் சரிவர கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.