- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் தண்ணீர்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் தார் சாலை அருகில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி மின் இணைப்பு தரப்பட்டது. அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் உள்ள அழுக்கு துணிகளை இங்கு கொண்டு வந்து நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் பிடித்து துணிகளை துவைத்து செல்கின்றனர். சிலர் தண்ணீரை திறந்து விட்டு கை, கால்களையும், முகங்களையும் கழுவுவதும், குளிப்பதுமாக உள்ளனர். சில நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக நீர்த்தேக்க தொட்டி இருக்கும் பகுதி நெடுகிலும் குடிநீர் வீணாகி குழம்போல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.