12 March 2023 2:11 PM GMT
#28843
பாசி படிந்த குடிநீர் தொட்டி
வடகாடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு மருத்துவமனையின் முன்பு குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் குடிநீர் தொட்டியில் பாசி படிந்து குடிநீர் அசுத்தமாக உள்ளது. இதனால் அந்த குடிநீரை யாரும் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.