28 Dec 2022 1:21 PM GMT
#24493
குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை
பேரானூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பேரானூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து சார்பில் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.