பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டுகோள்
நாட்டார்மங்கலம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம், செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர்கேட் வரை இயக்கப்படும் ஒரு அரசு டவுன் பஸ் தினமும் காலை, மதியம், இரவு ஆகிய நேரத்தில் 6 முறை இயக்கப்பட்டு வந்தது. இந்த அரசு டவுன் பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பலரும் சென்று வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆலத்தூர்கேட்டில் இருந்து இரவு 8.46 மணிக்கு துறையூருக்கு அந்த அரசு டவுன் பஸ் இயக்கப்படாமல், ஆலத்தூர்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு, மறுநாள் அதிகாலை 6 மணிக்கு தான் துறையூருக்கு இயக்கப்படுகிறது. இதனால் ஆலத்தூர்கேட்டிலிருந்து துறையூருக்கு இரவும், துறையூரிலிருந்து அதிகாலை ஆலத்தூர்கேட்டிற்கும் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பயணிகள் பலரும் ஆலத்தூர் கேட்டில் இருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்கின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி ஏற்கனவே இயக்கிய நேரத்தில் துறையூரிலிருந்து, ஆலத்தூர்கேட் வரை பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.