பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: கல்லூரி மாணவர்கள்
பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு கல்லூரிக்கு வந்து செல்ல சரியான அரசு பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பெரம்பலூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களும் பயணிகள் நிறைந்து கூட்டமாகவே வருகிறது. அந்த பஸ்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற முடிவதில்லை. ஏறினால் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவ-மாணவிகள் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் செல்வோரிடம் லிப்டு கேட்டும், சிலர் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கல்லூரி தொடங்கும், முடியும் நேரத்தில் அந்த வழியாக கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.