Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Feb 2024 12:04 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#44126

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்கரை, பூதாளக்குன்னு ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. அதோடு காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை இருக்கிறது. எனவே அந்த தெருவிளக்குகளை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 12:04 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#44125

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அரசு உண்டு உறைவிட பள்ளி வழியாக மாங்கம்வயல் பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் உள்ள குழிகளில், மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். அதோடு வாகனங்களும் பழுதாகி விடுகின்றன. மேலும் பாதசாரிகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 12:13 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#43977

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடை முதல் குடியிருப்புகள் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால், அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 12:13 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#43976

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) பாலவாடி லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி, வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால், அங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். வனவிலங்குகள் வீட்டுக்கு அருகில் வந்தால் கூட கவனிக்க முடியவில்ைல. எனவே தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jan 2024 10:13 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#43940

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 60-வது வார்டு சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பிருந்தாவன் காலனி 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் கடந்த ஒரு மாதமாக அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக கழிவுநீர் சீராக வழிந்தோடுவது இல்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 1:01 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#43822

சாலை விரிவுபடுத்தப்படுமா?

சாலை

கோவை-திருச்சி சாலையில் சூலூர் அருகே கலங்கல் பிரிவு முதல் காசியண்ணன் புதூர் வரை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லவே சிரமமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 1:01 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#43821

கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

சூலூர் அருகே காடாம்பாடி ஊராட்சி குமாரபாளையம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் காலனியில் புதிதாக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடம் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் தண்ணீர் வசதியோ, மின்சார வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே போதிய வசதிகளை செய்து கொடுத்து விரைவில் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 1:00 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#43820

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை பாலசுந்தரம் ரோட்டில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து ஜெயில் ரோட்டுக்கு செல்லும் இணைப்பு சாைல பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 12:47 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#43813

வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

கோவை சவுரிபாளையம் கல்லறை வீதியில் உப்பு தண்ணீர் வரக்கூடிய குழாய் பழுதடைந்து உள்ளது. தற்போது அதன் அடிப்பாகத்தில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. அந்த தண்ணீர், அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. இதுபோன்ற நிலை நீண்ட நாட்களாக நீடிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த குழாயை மாற்றி தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 11:49 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#43448

அதிகரிக்கும் விபத்துகள்

போக்குவரத்து

பொள்ளாச்சி அருகே தாராபுரம் ரோடு ஊஞ்சவேலாம்பட்டியில் சாலையோரத்தில் அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள வளைவான இடங்களில் சாலையை கடக்க முயலும் பொதுமக்களால் எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியவில்லை. அதோடு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கவனமும் திசை மாறுகிறது. இதனால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையோரத்தில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து விளம்பர பேனர்களையும் அகற்றி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 11:48 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#43447

சாக்கடையில் அடைப்பு

கழிவுநீர்

கோவை மேட்டுப்பாளையம் சாலை பூ மார்க்கெட் ஆர்.ஜி. தெருவில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 11:48 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#43445

ஒளிராத மின் விளக்குகள்

மின்சாரம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம், கவுண்டம்பாளையத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள ‘தமிழ் வாழ்க’ என்ற பெயர் பலகையில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த கட்டிடமே பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் மின் விளக்குகள் ஒளிர ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick