Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 April 2024 5:39 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#45848

குண்டும், குழியுமான சாலை

சாலை

பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மல்லப்பாடியை அடுத்த நாடார் கொட்டாய் பகுதியில் இருந்து முச்சாணி மேடு வரை நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வினீஸ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 April 2024 8:11 AM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#45703

ஒளிரும் பட்டைகள் பொருத்தலாமே

சாலை

சேலம் 4 ரோடு முதல் அஸ்தம்பட்டி செல்லும் வழியில் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் பெட்ரோல் பங்க் என ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பிரதான சாலையின் வளைவில் இரும்பு குழாய் வைக்கப்பட்டுள்ளன. இதன் மீது வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாய நிலையுள்ளது. எனவே சாலை மற்றும் இரும்பு குழாயில் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -சீனிவாசன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 April 2024 8:13 AM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#45702

கால்வாய் அமைக்க வேண்டும்

கழிவுநீர்

சேலம் 6-வது வார்டு பெரிய கொல்லப்பட்டி ஸ்ரீராம் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. விஷப்பூச்சிகள், கொசு தொல்லை அதிகமாக உள்ளன. எனவே பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணியை விரைவில் தொடங்குவார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். -சேகர், பெரிய கொல்லப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45699

விரிசல் விழும் மேம்பாலம்

மற்றவை

பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 90-க்கும் மேற்பட்ட தூண்கள் எழுப்பட்டன. பின்னர் பில்லர் கட்டப்பட்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு, கட்டப்பட்ட ஒரு சில தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ராகுல், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:36 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45698

குடிநீர், தார்சாலை பணி

சாலை

வெண்ணந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் புதிதாக தார்சாலையை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அதே பகுதிகளில் புதியதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு முதலில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை முடித்த பிறகு தார்சாலை பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனபால், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#45694

சாக்கடை கால்வாயை மூடலாமே...

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே கெண்டையனஅள்ளி அரசு பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் திறந்தவெளியில் சாக்கடை கால்வாய் உள்ளது. நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கால்வாயால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுகள் தொல்லையும் உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாக்கடை கால்வாயை சிலாப்புகள் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், பெரும்பாலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#45689

அபாய நிலையில் செப்டிக் டேங்க்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மாதேமங்கலம் ஊராட்சி ஆவாரங்காட்டூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்கின் மேற்பகுதி கான்கிரீட் சிலாப்புகள் உடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சபரி, நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 April 2024 7:56 AM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#45686

வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பர்கூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை உள்ள வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடைகள் சரிவர தெரியாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி வேகத்தடைகளில் வர்ணம் பூசி சரியாக தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், பர்கூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#45681

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர்- போச்சம்பள்ளி சாலையில் ஞாயிறு சந்தையின்போது சாலையோர வியாபாரிகள் அதிகளவில் கடைகள் அமைப்பது வழக்கம். போச்சம்பள்ளி- சந்தூர் செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் இருசக்கர வாகனங்களை சாலையோரமே நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே ஞாயிற்றுகிழமைகளில் போச்சம்பள்ளி முதல் சந்தூர் வரை செல்லும் சாலையை போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில்...

மேலும்
ஆதரவு: 10
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#45678

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேலம், சென்னை, புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடமாக ஆவின் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், மேல் பகுதிகளில் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் உடனடியாக மின்விளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 6:10 PM GMT
Mr.Nagarajan | ஓமலூர்
#45526

சுரங்கப்பாதைக்கு மின் விளக்கு வேண்டும்

மின்சாரம்

ஓமலூர் பிரிவு ரோடு முதல் மேச்சேரி செல்லும் வழியில் ரெயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்க பாதையானது பல்பாக்கி பகுதிக்கு சென்று வரும் வழியாகும். இந்த சுரங்க பாதையில் மின் விளக்கு இல்லை என்பதால் நேர வாகன ஓட்டிகள் சீரமம் அடைகின்றன. எனவே, மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 55
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 6:08 PM GMT
Mr.Nagarajan | சங்ககிரி
#45525

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் ஆத்தூர் நகராட்சி உட்பட்ட 30-வது வார்டு பகுதி சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யபடாமல் உள்ளது. சாக்கடைகால்வாயில் குப்பைகள் நிரம்பி கழிவு நீர் சாலையில் வழித்தோடுகிறது. மேலும் அப்பகுதியில் துர் நாற்றம் வீசி சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, தேங்கி உள்ள குப்பைகளை அப்புறபடுத்தி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -சுரேஷ், ஆத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick