Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 July 2022 6:21 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#3355

மின்சாரம் இல்லாத அரசு அலுவலகம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த அக்கியம்பட்டி மெயின் ரோட்டில் இருந்து பால் பண்ணை செல்லும் வழியில் அக்கியம்பட்டி ஊராட்சி பகுதி 2 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மின்வசதி இல்லை. இதனால் அங்கு பணியாற்றி வரும் அலுவலர் சிரமத்துடன் பணியாற்றி வருகிறார். எனவே கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அங்கு சான்றிதழ் பெற வரும் பொது மக்களின் நலன்கருதி அங்கு விரைவாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிர்மலா, அக்கியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 6:20 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#3352

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி தொண்டிகரடு முதல் மாங்குட்டைபாளையம் செல்லும் வழியில் முனியப்பன் கோவில் அருகில் தார் சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் கவுநீர் செல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், மாங்குட்டைப்பாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:41 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#3307

தார்சாலை அமைக்கப்படுமா?

தார்சாலை அமைக்கப்படுமா?சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்திற்கு கப்பல்வாடியில் இருந்து செல்லும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக இதே நிலையில் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அந்த பகுதிக்கு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:39 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#3306

முன்கூட்டியே மது விற்பனை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் காலை 6 மணி முதலே திருட்டுத்தனமாக மதுபானங்களை அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் மதுபிரியர்களால் பெண்கள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று முன்கூட்டியே மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பவானிசங்கர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:38 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#3305

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த பொம்மடிபேட்டை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன். இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைத்து தினமும் குப்பைகளை அகற்றி தூய்மையாக வேண்டும். -உதய்குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:34 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#3303

ஆமை வேகத்தில் சாலை பணி

ஆமை வேகத்தில் சாலை பணிசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பெனு கொண்டாபுரம் ஏரி முதல் நாகம்பட்டி போயர் கொட்டாய் வரை சலை பணி தொடங்கப்பட்டு நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் சாலையை தோண்டி இருபுறமும் மண் குவித்து வைத்துள்ளதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலை பணியை முடிக்க வேண்டும். -மதி, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:32 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#3302

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

செடி, கொடிகள் அகற்றப்படுமா?மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறையை சுற்றி முட்புதர்களும் செடி, கொடிகளும் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. எனவே பராமரிப்பு இல்லாமல் காணப்படும் அந்த பகுதியில் செடி, கொடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவராசு, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:30 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#3301

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் 8-வது வார்டு ஆல்ரபட்டி கிராமத்தில் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் சாலையில் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:28 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#3300

பாதியில் நிற்கும் அரசு கட்டிட பணி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த கெட்டுஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அது முழுமையடையாமல் பாதியிலேயே உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே பாதியில் நிற்கும் கட்டிட பணியை தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், கெட்டுஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:25 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#3299

சாலையின் நடுவே அடிபம்பு

சாலையின் நடுவே அடிபம்புதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சி வத்தல்பட்டியில் சிமெண்டு சாலையின் நடுவே அடிபம்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே உள்ள அடிபம்பை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.-பழனி, வத்தல்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 July 2022 4:17 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#3295

பராமரிப்பு இல்லாத மீட்டர் பெட்டி

மின்சாரம்

தர்மபுரி நகரின் மைய பகுதியில் தலைமை தபால் நிலையம் முன்பு அமைந்துள்ள சாலையோரத்தில் மின் கம்பத்தில் மீட்டர் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இது பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பராமரிப்பு இல்லாத இந்த மின் மீட்டர் பெட்டியை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, தர்மபுரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick