16 April 2023 4:09 PM GMT
#30986
குப்பைகளால் துர்நாற்றம்
ஆரணி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆரணி நகரின் மைய பகுதியில் பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்ட மணி கூண்டு உள்ளது. அந்த மணி கூண்டு அருகில் எப்போதும் துர்நாற்றம் வீசும் அளவில் அதிக அளவில் குப்பைகள் குவிகிறது. ஆரணி நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஆரணி.