14 July 2022 7:34 PM GMT
#1809
தேங்கி கிடக்கும் குப்பை
சிவகாசி.
தெரிவித்தவர்: அஜித் குமார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 25-வது வார்டு வேலாயுத ரஸ்தா ரோடு பழனியப்பா பேலஸ் எதிரில் குப்பைகள் தேங்கியுள்ளது. தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பையை தூய்மைப் பணியாளர்கள் அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.