பெரியகுளம் தென்கரை அருகே மூன்றாந்தல் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை அந்தபகுதியில் மீண்டும் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாக நிழற்குடை கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.