22 Aug 2022 1:50 PM GMT
#9995
பள்ளம் மூடப்பட்டது
ஆற்றூர்
தெரிவித்தவர்: மோகன்குமார்
அழகியமண்டபம்-குலசேகரம் சாலையில் ஆற்றூர் புளியமூடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையில் சாலையோரம் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் இருந்த பள்ளத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.