Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 March 2024 1:11 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#45414

கட்டிட கழிவுகள்

மற்றவை

கோவை புலியகுளம் மீனா எஸ்டேட் முதல் சவுரிபாளையம் வரை செல்லும் சாலைக்கு இடையே சங்கனூர் கால்வாய் பாலம் செல்கிறது. இந்த பாலத்தின் கரையோரம் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கட்டிட கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அங்குள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 1:11 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#45413

நோய் பரவும் அபாயம்

குப்பை

சூலூர் அருகே கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பேஸ்-2 பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பூங்கா இடத்தில் குப்பைகளை கொட்டி குவித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 1:06 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#45411

நடைபாதை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

குன்னூர் நகரில் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அனுமதியின்றி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே நகரில் மவுண்ட் ரோடு, வி.பி.தெரு, வண்டிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:31 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#45208

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி கூட்டுறவு வங்கி அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் உள்ள மேல் மூடி உடைந்து கிடக்கிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதோடு அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாய் மூடியை சரி செய்வதோடு அடைப்பை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#45207

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. அப்போது அவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லைைய கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:30 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#45206

நடைபாதை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

சூலூர் சுகந்தி நகரில் கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதேபோன்று சூலூர் அரசு ஆஸ்பத்திரி வீதியிலும் இருபுறமும் கழிவுநீர் கால்வாயின் மேல் பகுதியில் நடைபாதை அமைத்து தர வேண்டும். இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். எனவே விரைவாக அதிகரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:29 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#45205

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் தாலுகா நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபதெட்டு ஏரியா லைன்சில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான தெருவிளக்குகள் ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:29 PM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#45204

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ஆனைமலை பழைய பஸ் நிலையத்துக்கு எதிரே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாயில் அடைப்பை நீக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:29 PM GMT
Mr.V.Ramachandran | கிணத்துக்கடவு
#45203

தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுமா?

தண்ணீர்

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கோடை காலத்தில் கால்நடைகளின் தாகம் தீர்க்க, ஆங்காங்கே தொட்டி அமைத்து, அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். தற்போது கோடை காலம் தொடங்கி கடுமையான வெயில் வாட்டி வருகிறது. ஆனால் அந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவில்லை. இதனால் தாகம் தீர்க்க முடியாமல் கால்நடைகள் தவித்து வருகின்றன. எனவே அந்த தொட்டிகளின் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:28 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#45202

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகா ஏலமன்னாவில் இருந்து எலியாஸ் கடை வழியாக நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் எழுபது செட் முதல் எலியாஸ் கடை வரை பல்வேறு இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:28 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#45201

இருள் சூழ்ந்த சாலை

மின்சாரம்

கோவை காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து அவினாசி ரோடு செல்லும் பாலசுந்தரம் சாலையில் ஆங்காங்கே தெருவிளக்குகள் அடிக்கடி பழுதடைந்து முறையாக ஒளிராமல் போகிறது. இதனால் இரவில் அந்த சாலை பல இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகிறார்கள். எனவே தெருவிளக்குகள் முறையாக ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 12:54 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#44887

நடுரோட்டில் குழி

சாலை

கணபதி சத்தி சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகில் நடுரோட்டில் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக காலையிலும், மாலையிலும் மாணவ-மாணவிகளுடன் பெற்றோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த குழியை உடனடியாக மூட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick