Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2023 11:37 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#35625

பஸ்சில் ஊரின் பெயர் எழுதப்படுமா?

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவிலுக்கு,மயிலாடுதுறையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப்பஸ்சில் பின் புறத்தில் எந்த ஊர் செல்லும் பஸ் மற்றும் தடம் எண் போன்றவை எழுதாமல் உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்சில் பின் புறத்தில் ஊரின் பெயர் எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:36 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#35621

பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல்தூரம் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.பொதுமக்கள், தரங்கம்பாடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:35 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35620

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை பஸ் நிலையம், ரெயில்நிலையம், சிக்கல், வெளிப்பாளையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:34 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35619

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாகையிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாலைகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:33 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35617

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பஸ் நிலையம் , ரெயில்நிலையம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே படுத்து கொள்வதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வேளாங்கண்ணி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:31 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35616

குரங்குகள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வடமழை மணக்காடு சீதாளதேவி மாரியம்மன் கோவில் வாளாகத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் கோவில் அருகில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து துன்புறுத்துகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடமழை மணக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2023 11:30 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35615

பயன்பாட்டிற்கு வருமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிறுத்தத்தில் உள்ள கழிவறை பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இடத்தில் உள்ள கழிவறையை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திட்டச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:25 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35298

தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம்கீழ்வேளூர் வட்டம் சந்தை தோப்பு பகுதி ஓடம்போக்கியாற்றிலிருந்து திருக்கண்ணங்குடி செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக தூர்ந்து போய் விட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரவேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35297

புதிய கட்டிடம் வேண்டும்

ட்ரெண்டிங்

தங்கமங்கலம் மகளிர் சுய உதவி கட்டிடத்தில் கிளை தபால் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் செயல்படும் தங்கமங்கலம் கிளை தபால் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடமாக கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35296

தொற்று நோய் பரவும் அபாயம்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் பரவை மார்க்கெட் பகுதியை சுற்றி காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகளை கொட்டி கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பழம் மற்றும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:22 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35295

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேளாங்கண்ணி தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள அய்யனார் குளம் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்து கிடக்கும் அய்யனார் குளம் சாலையை சீரமைக்க வேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 2:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#35294

மண் அரிப்பு தடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமத்தில் கடற்கரையில் உள்ள சவுக்கு மரம், மணல் திட்டுக்கள் கஜா புயலில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் கடல் தண்ணீர் அடிக்கடி உள்ளே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சவுக்கு மரம் நட்டு, மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick