20 Sep 2022 9:59 AM GMT
#16067
குப்பைகளால் துர்நாற்றம்
எலவனாசூர்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை புறவழிச்சாலையில் உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.