21 April 2024 10:21 AM GMT
#46056
ஆபத்தான மின்கம்பம்
பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் காலனி செல்லும் சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்து காணப்படும் மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?