9 Aug 2023 2:01 PM GMT
#37737
தெருவிளக்கு வசதி வேண்டும்
பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே கல்லணை கால்வாய் வழியாக மதுக்கூர் ரோடுக்கு செல்லும் ஆற்றங்கரை சாலையில் தெரு விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையோரத்தில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.